தமிழரசு கட்சியே தமிழின அழிவுக்கு காரணம்! ஆனந்தசங்கரி குற்றச்சாட்டு!

0
496
Anandasangaree Accusing TNA Sampanthan Sri Lanka Tamil News

இனியும் தமிழரசுக் கட்சியை மக்கள் நம்புவதற்குத் தயாராக இல்லையென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கூறியுள்ளார். Anandasangaree Accusing TNA Sampanthan Sri Lanka Tamil News

மேலும் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும், தங்க​ளது தொலைபேசிகளைச் செயலிழக்கச் செய்துவிட்டு, அமைதி காத்தனர். இதனால் தான், பேரழிவே ஏற்பட்டது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். .

அங்கு தொடர்ந்துரைத்த அவர், பங்காளிகளாக அல்லாமல் கூட்டாளிகளாக யார் வந்தாலும், தமிழர் விடுதலைக் கூட்டணியில் சேர்க்கத் தயாரென்றும் அவ்வாறு பலரும் வந்து இணைந்துகொண்டு, கூட்டாகத் தேர்தலில் போட்டியிட்டுப் பெருமளவில் வெற்றியைப் பெற்றுக் கொண்டால், தான் கட்சியையே அவர்களிடம் ஒப்படைத்து விடுவேன் என்றும் வடக்கு முதலமைச்சராக இருக்கின்ற விக்கினேஸ்வரனை, தமிழரசுக் கட்சியில் இனியும் இணைந்துக்கொண்டு செயற்பட வேண்டாமெனத் தான் கூறியிருப்பதாகவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள சங்கரியின் அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

விரைவில் பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடை!

பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள தயார்! மஹிந்த அறிவிப்பு!

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்!

25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம்! அமைச்சர் சஜித்!

மகிந்தவை காப்பாற்றியது நல்லாட்சியே! மங்களசமரவீர கருத்து!

Tamil News Live

Tamil News Group websites