பொல்கொல்ல குண்டு வெடிப்பு சம்பவம் – 4 புலி உறுப்பினர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை!

0
489
Polgolla Blast 4 LTTE Jailed 5 Years Sri Lanka Tamil News

கடந்த 2008 ஆம் ஆண்டு மாத்தளையில் இருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில், பொல்கொல்ல திறந்த பல்கலைக்கழகத்துக்கு அருகே இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. இதில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் காயமடைந்தனர். Polgolla Blast 4 LTTE Jailed 5 Years Sri Lanka Tamil News

இந்தக் குண்டுவெடிப்புச் சதியுடன் தொடர்புபட்டிருந்தார்கள் என்று கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் நால்வர் கடந்த 10 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கு எதிரான வழக்கு நேற்று கொழும்பு மேல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேக நபர்கள் நால்வரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

இவர்கள் நால்வரும், 2008ஆம் ஆண்டு தொடக்கம், 10 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதால், குறைந்தபட்ச தண்டனையை வழங்குமாறு, சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டவாளர்கள் கோரியிருந்தனர்.

இதனையடுத்து , குற்றம்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் நான்கு பேருக்கு 5 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்!

25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம்! அமைச்சர் சஜித்!

மகிந்தவை காப்பாற்றியது நல்லாட்சியே! மங்களசமரவீர கருத்து!

அதி நவீன விசேட படையணி உருவாக்கம் தொடர்பில் நாலக டி சில்வாவிடம் சிஐடியினர் விசாரணை!

ரூபாவின் பெறுமதியைக் காப்பாற்ற பிரதமரினால் விசேட குழு

Tamil News Live

Tamil News Group websites