ஞானசார தேரரின் சிறைப்படுத்தல் நடவடிக்கை அவரை தனிமைப்படுத்துவதற்கான ஒரு முயற்சி மாத்திரம் அல்ல இலங்கையிலுள்ள பௌத்த தலைவர்களை சிறைப்படுத்தி கொலை செய்தாவது இலங்கையை பலவீனப்படுத்தி இந்தியாவின் ஒரு பிராந்தியமாக இலங்கையை மாற்றுவதற்குரிய திட்டம் என சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார். Ravaya Political Party Statement Sri Lanka Tamil News Today
இந்த திட்டம் தொடர்பான தகவல்கள் நாலக சில்வா விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இந்தியரிடமிருந்து வெளியாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த இந்தியர் சிங்கள இளைஞர்களுக்கு குறுந்தகவல் மூலம் தெரிவித்திருந்த செய்தி முக்கிய ஒன்றாகும். அதில், இந்த நாட்டிலுள்ள சிங்கள தலைவர்களை சிறைப்படுத்தியோ அல்லது கொலை செய்வதன் மூலமாகவோ இந்தியாவுக்கு தேவைப்படும் பொம்மை ஆட்சியொன்றை இந்நாட்டில் ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் இலங்கையை இந்தியாவின் பிராந்தியமாக வைத்திருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஞானசார தேரரை தொடர்ந்தும் சிறையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அதற்கு எதிராக பாதையில் இறங்கி போராட்டம் நடாத்தப் போவதாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.
ஞானசார தேரரின் சுகதுக்கம் விசாரிக்க நேற்று சிறைச்சாலைக்குச் சென்றிருந்த போது ஊடகங்களிடம் தேரர் இதனைக் கூறினார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
மகிந்தவை காப்பாற்றியது நல்லாட்சியே! மங்களசமரவீர கருத்து!
அதி நவீன விசேட படையணி உருவாக்கம் தொடர்பில் நாலக டி சில்வாவிடம் சிஐடியினர் விசாரணை!
ரூபாவின் பெறுமதியைக் காப்பாற்ற பிரதமரினால் விசேட குழு
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!
ஐ.நா வில் கடைசி நேரத்தில் உரையை மாற்றிய மைத்திரிபால!