உங்கள் குடும்பத்தின் சொத்து விவரங்களை வெளியிடத் தயாரா? – ஸ்டாலினுக்கு ஆர்.பி.உதயகுமார் சவால்!

0
504
ready publish family's property details - rb.udayakumar challenge Stalin

வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.ready publish family’s property details – rb.udayakumar challenge Stalin

“தி.மு.க தலைவர் ஸ்டாலின் தொடர்ச்சியாக அ.தி.மு.க அரசை இழிவாகப் பேசிவருகிறார். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அம்மா பேரவை மாநிலச் செயலாளர் என்ற முறையில் பொறுப்பற்ற முறையில் பேசி வரும் ஸ்டாலினுக்கு கண்டன அறிக்கை ஒன்றை வெளியிடுகிறேன்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்கு கொண்டுவரப்பட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடியது போன்ற பல்வேறு செயல்பாடுகளை மக்களின் விருப்பத்துக்கு ஏற்றதுபோல் செயல்படுத்தி வருகிறோம்.

ஆனால், ஸ்டாலினோ தேவையற்ற அவதூறுகளைப் பரப்புகிறார். ஸ்டாலின் குடும்பத்தில் உள்ள மனைவி, மகன், அண்ணன், தம்பி என அனைவரின் சொத்துகளையும் வெளியிடத் தயாரா என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கேட்டு இருந்தார்.

அதைத் தற்போது வரை வெளியிடவோ அவருக்கு மனது இல்லை. 1977 முதல் தற்போது வரை அ.தி.மு.க அரசை வசைபாடுவதைத்தான் வேலையாக வைத்துள்ளார்.

இதற்கு அவர் கண்டிப்பாகப் பதில் பேச வேண்டும். அசையும் மற்றும் அசையா சொத்துகளின் முழு விவரத்தையும் வெளிப்படையாக வெளியிட ஸ்டாலின் தயாராக உள்ளாரா? நாள்தோறும் எழுந்தவுடன் அ.தி.மு.க அரசைத் தவறாகப் பேச வேண்டும் என்பதைக் கொள்கையாகத் தி.மு.க-வினர் வைத்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல ஆண்டுகளாகக் கட்சியில் பணி ஆற்றிவந்தவர். ஆனால், அவரை அவதூறாகத் தொடர்ந்து பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே ஸ்டாலினுடைய எண்ணம். மக்கள் பணியாற்றும் எண்ணம் சிறிதளவுகூட இல்லை.

எத்தனை முறை எங்களை நீங்கள் தவறாகப் பேசினாலும் முதல்வரின் மக்கள் பணி என்றும் மாறாது. தி.மு.க-வினர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன.

அது தெரியாமல் ஸ்டாலின் என் மீது வழக்குத் தொடுங்கள் என்று வசைபாடி வருகிறார்” என்று பேட்டியளித்தார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :