தனக்குள் ஒளிந்திருந்த பாடகனை மேடையில் வெளிக்காட்டினார்! – ஜெயக்குமார்!

0
364
platform showed singer hidden himself - jayakumar india tamil news

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மேடையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் எம்ஜிஆர் பாடல்களை பாடி அசத்திய சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.platform showed singer hidden himself – jayakumar india tamil news

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையடுத்து இதன் நிறைவு விழா இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைப்பெற்று வரும் இந்த நிறைவு நிகழ்ச்சியில் பிரபல லைட் மியூசிக் குழுவான லக்ஷ்மண் ஸ்ருதி இன்னிசை கச்சேரி நடைப்பெற்றது.

இக்கச்சேரியை பார்வையிட்ட அமைச்சர் ஜெயக்குமார் அவர்களிடன் ஒரு பாடலை பாட கச்சேரி குழுவினர் கேட்டுக்கொண்டனர்.

இந்த வேண்டுகோளை ஏற்று அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் ‘அழகிய தமிழ் மகள் இவள்’ பாடலை பாடினார்.

பின்னர் ரசிகர்கள் மற்றொரு பாடலை பாட வற்புறுத்தியதால், ‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க’ பாடலையும் பாடினார்.

இப்பாடல்களை தொடர்ந்து, பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா, மேடைக்கு வந்து தன்னுடன் அமைச்சர் ஒரு பாடலை பாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால், சுசீலாவுடன் சேர்ந்து ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ பாடலையும் அவர் பாடி அசத்தினார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :