அடுத்த மாதம் முதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் கட்டாயம்!

0
377

பயணிகள் முச்சக்கர வண்டிகளுக்குக் கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது அடுத்த மாதம் முதல் கட்டாய நடைமுறைக்குக் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபை தெரிவித்துள்ளது. Three Wheeler Meter Machine Sri Lanka Tamil News

குறித்த சட்டம் அடுத்த மாதம் இரண்டாம் வாரம் முதல் அமுலுக்குக் கொண்டு வரப்படும் என வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்தார்.

மீட்டர் பொருத்துவதற்காக சாரதிகளுக்கு நீண்ட காலம் அவகாசம் வழங்கப்பட்டதாகவும், வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை மேலும் நீடிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சட்டத்தை மீறும் முச்சக்கர வண்டி சாரதிகளை கைது செய்வதற்கு அல்லது அபராதம் விதிப்பதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட மேலும் தெரிவித்தார்.

அத்துடன் முச்சக்கர வண்டிகளுக்குக் கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது தவிர பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கும் சட்டமும் நடைமுறைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

ஐ.நா வில் கடைசி நேரத்தில் உரையை மாற்றிய மைத்­தி­ரி­பால!

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சம்பந்தனுக்கு வாக்குறுதி!

சிறையில் போடவா பாதுகாப்பு பற்றி கரிசனை? மகிந்த அதிரடி கருத்து!

ரஜமஹா விகாரை அரை நிர்வாண படங்கள்! மூவர் கைது!

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

Tamil News Live

Tamil News Group websites