குடும்ப தகராறு காரணமாக மனைவியை அரிவாளால் வெட்டி தலைமறைவான கணவர்!

0
434
husband cut spouse wife due family dispute india tamil news

நாகர்கோவில் அருகே குடும்ப தகராறு காரணமாக கல்லூரி பேராசிரியை அரிவாளால் வெட்டி தலைமறைவான கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.husband cut spouse wife due family dispute india tamil news

அஞ்சுகிராமத்தையடுத்த கனகப்புரம் பகுதியை சேர்ந்த வக்கீல் டால்டன் செல்வ எட்வர்ட்டின் மனைவி ஜெகதீஷ்ஷைனி தோவாளை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

குடும்ப தகராறில் ஆத்திரமுற்ற கணவர் டால்டன், மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதனையடுத்து படுகாயமுற்ற பேராசிரியை ஜெகதீஷ்ஷைனியை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் தப்பியோடிய கணவர் டால்டன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

படுகாயமுற்ற பேராசிரியை ஷைனியின் அண்ணன் ஜெகநாதன் தேமுதிகவில் குமரி மேற்கு மாவட்ட செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :