வடக்கில் இராணுவத்தை வெளியற கோருவது இன்னொரு போருக்கே! இரா­ணு­வத் தள­பதி மகேஷ் சேனநா­யக்க!

0
599

நாட்­டின் தேசிய பாது­காப்­புக்கு எந்­த­வொரு அச்­சு­றுத்­த­லும் காணப்­ப­ட­வில்லை. எதிர்­கால அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு இரா­ணு­வம் தயா­ராக இருக்­கின்­றது. அத்­து­டன் நாட்­டில் உள்ள அனைத்து குடி­மக்­க­ளும் தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான பொறுப்பு இராணுவத்திடம் உள்ளதாக இரா­ணு­வத் தள­பதி மகேஷ் சேனநா­யக்க தெரி­வித்­துள்­ளார். Army Commander Mahesh Senanayake Speech Sri Lanka News

கண்டி தலதா மாளி­கை­யில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற வழி­பாட்டு நிகழ்­வைத் தொடர்ந்து ஊட­கங்­க­ளுக்குக் கருத்துத் தெரி­வித்தபோதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

வடக்கு மாகா­ணத்­தி­லி­ருந்து இரா­ணு­வத்தை அகற்­ற­வேண்­டும் என்று தமிழ்த் தலை­மை­க­ளும் புலம்­பெ­யர் அமைப்­புக்­க­ளும் கோரு­வது இன்­னொரு போரை ஆரம்­பிப்­ப­தற்­கா­கவே.

ஆனால் அங்­குள்ள தமிழ் மக்­க­ளில் 80 சத­வீ­த­மா­னோர் இரா­ணு­வம் வெளி­யே­றுவதை விரும்­ப­வில்லை.

நாட்­டில் இரா­ணு­வம், கடற்­படை மற்­றும் வான்­படை ஆகி­யவை வலு­வான படை­க­ளாக உள்­ளன. நாட்­டில் போருக்கு முற்­றுப்­புள்ளி வைத்த இந்த சக்­தி­கள், நாட்­டின் பாது­காப்­புச் சூழ்­நிலை தொடர்ப்­பி­லும் நன்கு அறிந்­தி­ருப்­ப­தாகத் தான் நம்­பு­கின்­றேன் என கூறியுள்ளார்

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

ஐ.நா வில் கடைசி நேரத்தில் உரையை மாற்றிய மைத்­தி­ரி­பால!

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சம்பந்தனுக்கு வாக்குறுதி!

சிறையில் போடவா பாதுகாப்பு பற்றி கரிசனை? மகிந்த அதிரடி கருத்து!

ரஜமஹா விகாரை அரை நிர்வாண படங்கள்! மூவர் கைது!

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

Tamil News Live

Tamil News Group websites