மோடியை இன்னும் சிறப்பாக விமர்சிப்பேன்..! : பாஜக-வை கலங்கடிக்கும் ரம்யா..!

0
465
congress ramya comments twitter bjp modi better india tamil news

நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில் நுட்பப் பிரிவு தலைவருமான, ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா, கடந்த சில நாட்களுக்க முன்பு, அவரது டுவிட்டர் பக்கத்தில் ஒரு போட்டோஷாப் புகைப்படத்தை பதிவேற்றியிருந்தார்.congress ramya comments twitter bjp modi better india tamil news

பிரதமர் மோடி, அவரது மெழுகுச் சிலை மீது அவரே ‘தான் ஒரு திருடன்’ என எழுதுவது போல அந்த புகைப்படம் இருந்தது.

இதுதொடர்பாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக வழக்கறிஞரான சையது ரிஸ்வான் அகமது, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில், கோமதி நகர் போலீசார் ரம்யா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்தனர். ஆனால், ரம்யா கொஞ்சமும் அதனைக் கண்டுகொள்ளவில்லை.

நடிகர்கள் அமிதாப் பச்சன், அமீர்கான் ஆகியோர் நடிக்கும், “தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்” என்ற படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கும் நிலையில், இந்த படத்தில் அமீர்கான் கதாபாத்திரம், அனைவரையும் ஏமாற்றுவதாகும் என்றும் செய்திகள் வெளியாகின.

மேலும், ‘நம்பிக்கை துரோகம் என்பது எனது சுபாவம்’ என்று இந்தப் படத்தின் காட்சி ஒன்றில் அமீர்கான் பேசுவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த விஷயங்களை எடுத்துக்கொண்ட ரம்யா, அமீர்கான் புகைப்படத்தை பதிவிட்டு, “ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்திற்கு மோடி நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்” என்று மீண்டும களத்தில் இறங்கினார்.

அமீர்கானின் நடித்த கதாபாத்திரத்தை, நிஜத்தில் மோடி நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதுதான் அவரது விமர்சனம். இதுவும் பரபரப்பை கிளப்பி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் தேசத்துரோக வழக்கு தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், மோடி தொடர்பான தனது ‘டுவிட்டர் பதிவைப் பிடிக்காதவர்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால் அடுத்தமுறை இன்னும் சிறப்பாக விமர்சிப்பேன் என்பதுதான்’ என்றும் பாஜக-வினரை கலக்கம் அடையச் செய்துள்ளார்.

தனது பதிவின் முடிவில், வழக்கம்போல #PMChorHai (பிரதமர் ஒரு திருடர்) என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :