ஐ.நா வில் கடைசி நேரத்தில் உரையை மாற்றிய மைத்­தி­ரி­பால!

0
799

இலங்கை இரா­ணு­வத்­தி­ன­ருக்கு பொது­மன்­னிப்பு வழங்­கும் யோச னையை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐ.நா. பொதுச் சபைக் கூட்­டத்­தில் முன்­வைக்­கக் கூடும் என்று தக­வல் வெளி­யா­கி­யி­ருந்­தது. அதற்கு வலுச் சேர்க்­கும் வகை­யில் பத்­தி ரிகை ஆசி­ரி­யர்­க­ளு­ட­னான ஊட­கச் சந்­திப்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால கருத்து வெளி­யிட்­டி­ருந்­தார்.

அரச தலை­வர் இத்­த­கைய யோச­னையை முன்­வைப்­ப­தற்கு கடும் எதிர்ப்­புக் கிளம்­பி­யது. எதிர்க்­கட்­சி­யாக இருந்­தா­லும் அர­சு­டன் இணங்­கிச் செல்­லும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் அரச தலை வ­ரின் யோச­னைக்கு கடும் எதிர்ப்பு வெளி­யிட்­டி­ருந்­த­து­டன், அந்த யோச­னையை ஏற்­கக் கூடாது என்று இலங்­கைக்­கான ஐ.நா. வதி­வி­டப் பிர­தி­நிதி ஊடாக ஐ.நா. பொதுச் செய­ல­ருக்­குத் தெரி யப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து இறுதி நேரத்­தில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐ.நா. பொதுச் சபைக் கூட்­டத்­தில் தனது உரை­யில் அத்­த­கைய யோச­னையை முன்­வைப்­ப­தி­லி­ருந்து பின்­வாங்­கி­னார். சர்ச்­சை­க­ளைத் தவிர்க்­கும் வகை­யில், அவர் தனது பேச்­சில் அத்­த­கைய விட­யங்­க­ளைத் தொட்­டுக் காட்­ட­வில்லை.
அரச தலை­வர் முன்­வைக்க இருந்த யோச­னையை உள்­ள­டக்­கி­ய­தான அவ­ரது உரை,

எதிர்ப்­புக்­க­ளை­ய­டுத்தே இறுதி நேரத்­தில் மாற்­றப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பில் அரச தலை­வ­ரு­டன் நியூ­யோர்க் சென்­றுள்ள அமைச்­சர் மனோ­க­ணே­சன் தனது முக­நூ­லில் பதி­விட்­டுள்­ளார். ‘உண்­மை­யில் அரச தலை­வர் ஆற்ற வந்த உரை இது­வல்ல. ஆனால் இறு­தித் தினங்­க­ளில் உரை வடி­வம் மாற்­றப்­பட்­டது. அது எப்­படி, ஏன் என்ற விவ­ரங்­களை பகி­ரங்­க­மா­கச் சொல்ல முடி­யாது. சொன்­னா­லும் பல­ருக்கு புரி­யாது’ என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

ஐக்­கிய நாடு­கள் சபை­யின் மனித உரி­மை­கள் ஆணைக்­குழு இலங்கை தொடர்­பில் முன்­வைத்­துள்ள முன்­மொ­ழி­வு­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தில் உத­வி­யைப் பெற்­றுக்­கொள்­ளு­தல் நாட்­டின் இறை­மைக்­கும் தேசிய பாது­காப்­புக்­கும் இரா­ணு­வத்­தி­ன­ரின் மதிப்­புக்­கும் பாதிப்பு ஏற்­ப­டாத வகை­யில் நட­வ­டிக்கை எடுத்­தல் தொடர்­பாக இதன்­போது ஐக்­கிய நாடு­கள் பொதுச் சபை­யில் சிறப்பு முன்­மொ­ழி­வொன்றை முன்­வைக்க எதிர்­பார்த்­தி­ருப்­ப­தாக அரச தலை­வர் மைத்­தி­ரி­பால நியூ­யோர்க் பய­ண­மா­வ­தற்கு முன்­னர் தெரி­வித்­தி­ருந்­தார்.

இதே­வேளை, மனோ­க­ணே­சன் தனது முக­நூல் பதி­வில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, ‘அமைச்­சர் மனோ கணே­சன், என்ன, என் உரை­யில் சர்ச்சை எது­வும் இல்லை தானே! இப்­போது திருப்­தி­தானே?’
ஐ.நா. சபை­யில் உரை நிகழ்த்தி இறங்கி வந்­த­தும் அமைச்­சர்­கள் குழு அரச தலை­வ­ரைச் சூழ்ந்த போது, என்னை அழைத்த மைத்­திரி, என் தோளில் கைகளை போட்­ட­வாறு இப்­ப­டிக் கேட்­டார்.

ஜெனிவா தீர்­மா­னத்தை எதிர்த்து பேசி அதிலே திருத்­தம் செய்ய வேண்­டும் என்று, மைத்­திரி, ஐ.நா. சபை­யில் தனது உரை­யின் போது கோரிக்கை முன் வைக்க போகி­றார் என்;று இலங்­கை­யில் பர­ப­ரப்­பாக பேசப்­பட்­டது. அப்­படி சர்ச்­சைக்கு உரிய கருத்­து­கள் எது­வும் அரச தலை­வ­ரின் உரை­யில் இடம்­பெ­ற­வில்லை.

வழ­மை­யாக இலங்­கை­யிலே பேசு­கின்ற கருத்­து­க­ளையே தனது உரை­யிலே குறிப்­பிட்­டார். ஆக, போர் முடிந்து பத்து ஆண்­டு­கள் ஆகி­விட்ட நிலை­யில், இனி­மேல் பன்­னாட்­டுச் சமூ­கம் எனது நாட்டை புதிய கண்­ணோட்­டத்­தில் பார்க்க வேண்­டும்’ என்று மேல­தி­க­மாக குறிப்­பிட்­டார்.

‘அந்­தப் புதிய கண்­ணோட்­டம் என்­ன­வென்று நீங்­கள் இங்கே கூற­வில்லை. நல்­லது. அது என்­ன­வென்று ஊருக்கு போய் விளக்­க­மாக சொல்­லுங்­கள் அரச தலை­வரே’ என்று நான் கிண்­ட­லாக சொல்ல, அனை­வ­ரும் சிரித்­தார்­கள் – என்று பதி­விட்­டுள்­ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

சிறையில் போடவா பாதுகாப்பு பற்றி கரிசனை? மகிந்த அதிரடி கருத்து!

ரஜமஹா விகாரை அரை நிர்வாண படங்கள்! மூவர் கைது!

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

கொழும்பு – கட்டுநாயக அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடல்!

அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து  யாழில் உண்ணாவிரத போராட்டம்

Tamil News Live

Tamil News Group websites