{ SSI daughter killed crash Complaint stunt director }
சென்னையில் இருசக்கர வாகனத்தின் மீது மினிவேன் மோதிய விபத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் மகள் உயிரிழந்தார். மகள் மரணத் தில் சந்தேகம் இருப்பதாக காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் புகார் அளித்துள்ளார்.
சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.எஸ்.ஐ ஆக பணிபுரிபவர் துளசிங்கம். இவர் மகள் ரம்யா. இவர் பெண்கள் அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்றிரவு வேலை முடிந்து, வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந் தார்.
வால்டாக்ஸ் சாலை அருகே சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த மினி வேன், ரம்யா மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ரம்யா மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், மினிவேன் ஓட்டுநர் பழனியை கைது செய்தனர்.
இந்த நிலையில் ரம்யா உயிரிழப்புக்கு, தனது மாமனார் சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் ரத்தினம் தான் காரணம் என்று துளசிங்கம் புகார் அளித்துள்ளார்.
குடும்பத்தகராறு காரணமாக ரத்தினம் மற்றும் அவரது மகன் எத்திராஜ் ஆகியோர் ரம்யாவை கொலை செய்திருக்கலாம் என சந்தேகப் படுவதாக புகாரில் தெரிவித்துள்ளார். இதுபற்றி யானைக்கவுனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags: SSI daughter killed crash Complaint stunt director
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவர்கள்!
- இஸ்லாமிய இளைஞரோடு பழகியதற்காக இளம்பெண் மீது தாக்குதல் நடத்திய போலீசார்!
- ஆதார் அடையாள அட்டை செல்லுபடியாகும்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
- பூதக்கண்ணாடியை வைத்துப்பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் ஊழலை கண்டுபிடிக்க முடியாது! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
- 2 வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது? – விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்!
- எம்.எல்.ஏ பதவியிலிருந்து கருணாஸை தகுதிநீக்கம் செய்யுங்கள்! – சபாநாயகரிடம் மனு!
- தமிழத்தில் 3 நாட்களுக்கு மழை! – இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
- போலி ஆவணங்கள் மூலம் தொழிலதிபர்களை ஏமாற்றிய தம்பதி கைது!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
-