டுவிட்டரில் மோடியை விமர்சித்ததால் நடிகை ரம்யா மீது தேச துரோக வழக்கு பதிவு!

0
463
actress ramya booked sedition criticized modi india tamil news

நடிகையும், காங்கிரஸின் முன்னாள் மக்களவை உறுப்பினருமான ரம்யா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.actress ramya booked sedition criticized modi india tamil news

கன்னட திரைத்துறையின் முன்னணி நடிகையும், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்தவருமான ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக உள்ளார்.

இதையடுத்து கர்நாடகா மாண்டியா தொகுதியிலிருந்து மக்களவைக்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

பிறகு 2014ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். தற்போது காங்கிரஸின் சமூகவலைதள செயல்பாடுகளை கவனித்து வருகிறார்.

ரம்யாவின் ட்டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியின் மெழுகுச் சிலையில் அவரே திருடன் என நெற்றியில் எழுதிக்கொள்வது போன்று எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து உத்தரப்பிரதேச மாநிலத்தை செய்த சையது ரிஸ்வான் என்ற வழக்கறிஞர், மோதிநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து ரம்யா மீது தேசத்துரோக வழக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :