மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக மே 17 இயக்கம் தெரிவித்துள்ளது. (thirumurugan gandhi health worsen may 17 movement)
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்தி மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்ற நிலையில் சிறை அறையில் அவர் மயக்கமடைந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தப் பின்னணியில் மே 17 இயக்கம் தனது முகநூலில் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் பரபரப்பு குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளது.
மே 17 இயக்கத்தின் அறிக்கை, 45 நாட்களாக தோழர் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் தனியறையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.
பகலில் கூட சிறையில் இருக்கும் மற்றவர்களை அவர் சந்திக்கவோ, பேசவோ, வெளியில் செல்லவோ அனுமதிக்கப்படுவதில்லை.
அவர் சிறை வைக்கப்பட்டிருக்கும் தனி சிறை அறையானது கடந்த இரண்டு ஆண்டு காலமாக எவருமே தங்காத பழைய கட்டிடமாகும்.
அந்த அறையில் காற்றோட்டம் கூட சரியாக இல்லாததால் தோழருக்கு சுவாசக் கோளாறு பிரச்சினையும் அவ்வப்போது ஏற்பட்டுள்ளது.
தூசி படிந்த, பூச்சிகள் பெருமளவில் நுழையும் சுகாதாரமற்ற அறையாக தோழர் தங்கியிருக்கும் சிறை அறை இருக்கின்றது.
அறைக்கு அருகில் புதர் மண்டியிருப்பதால் ஒரு நாள் பகல் நேரத்தில் பாம்பு ஒன்று தோழரின் அறைக்குள் நுழைந்திருக்கிறது.
பகல் நேரமாக இருந்த காரணத்தினால் தோழரால் அதனை கவனித்து விரட்ட முடிந்திருக்கிறது.
முறையான உணவும் வழங்கப்படுவதில்லை. நீதிமன்றங்களுக்கு அழைத்து வரும் நேரத்திலும் மதிய நேரத்தில் உணவு பெரும்பாலான நேரங்களில் வழங்கப்படுவதில்லை.
சிறைக்குள் வழங்கப்படும் உணவும் சுகாதாரமான உணவாக இருப்பதில்லை. பல நேரங்களில் வயிற்றுப் போக்கும், வாந்தியும் ஏற்பட்டுள்ளது.
நேற்று முந்தினம் சனி காலை சிறையில் வழங்கப்பட்ட சேமியாவினை உண்டுவிட்டு உள்ளே நின்றிருந்த போது தோழர் திருமுருகன் காந்தி சிறைக்குள் மயங்கி விழுந்திருக்கிறார்.
அப்போது அந்த வழியே வந்த காவல் பணியாளர் ஒருவர் எதேச்சையாக பார்த்து அவரை தோளில் தூக்கி சென்று சிறை மருத்துவரிடம் கொண்டு சென்றிருக்கிறார்.
தொடர்ச்சியான சுகாதாரமற்ற உணவாலும், காற்றோட்டம் இல்லாததாலும் தோழரின் உடல் நிலை கடந்த சில நாட்களாக மிகவும் நலிவுற்றிருக்கிறது.
நேற்றும் சிறை மருத்துவரிடம் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். இன்று திங்கள் கிழமை என்பதால் சிறையில் மனுபோட்டு தோழரை சந்திக்க இயக்கத் தோழர்களும், குடும்பத்தினரும் சென்ற போது தான், இன்று மீண்டும் தோழரை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றிருப்பது தெரியவந்தது. அவரது உடல் நிலைக் குறைவு குறித்த எந்த தகவலும் அளிக்கப்படவில்லை.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- இமாசலப் பிரதேசத்தில் தொடர் மழை; 2 பேர் பலி – 70 பேர் வெள்ளத்தில்
- சித்தராமையா மீண்டும் முதலமைச்சராக வேண்டும் ; காங்கிரஸ் வலியுறுத்தல்
- கருணாஸை விளக்கமறியலில் வைத்து விசாரிக்க பொலிஸ் கோரிக்கை
- பெற்ரோல் விலை வரலாறு காணாத உயர்வு; சாரதிகள் அதிர்ச்சியில்
- பெற்ரோல் விலை மீண்டும் உயர்வு
- சென்னையில் மின்சார புகையிரதம் மோதி இரண்டு பேர் பலி
- 7 பேர் விடுதலை; தமிழக ஆளுநரை அற்புதம்மாள் சந்திப்பு
- டெல்லியில் சிகிச்சை பெற்றுவந்த 11 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; thirumurugan gandhi health worsen may 17 movement