கருணாஸை விளக்கமறியலில் வைத்து விசாரிக்க பொலிஸ் கோரிக்கை

0
383
police filed pettition chennai egmore court take karunas custody

கருணாஸை விளக்கமறியலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் பொலிஸார் மனுதாக்கல் செய்துள்ளனர். (police filed pettition chennai egmore court take karunas custody)

எம்எல்ஏ கருணாஸ் கடந்த 16 ஆம் திகதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல்வர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளை எச்சரிக்கும் வகையிலும் சாதி ரீதியாகவும் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியிருந்தார்.

இதுதொடர்பாக அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், கருணாஸை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை கருணாஸ் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

கருணாஸின் சட்டத்தரணி நேற்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் பிணை கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த பிணை மீதான விசாணை நாளை எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த நிலையில் கருணாஸை 7 நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் பொலிஸார் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

பொலிஸார் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; police filed pettition chennai egmore court take karunas custody