போலி ஆவணங்கள் மூலம் தொழிலதிபர்களை ஏமாற்றிய தம்பதி கைது!

0
405
couple arrested duping businessmen fake documents india tamil news

திருப்பூரைச் சேர்ந்த செந்தில் குமார், அவரது மனைவி ப்ரியா மற்றும் நண்பர் ராஜேஷ்கண்ணா ஆகியோர், பணத்தேவை அதிகம் உள்ளவர்கள் மற்றும் வங்கியால் கடன் அளிக்க முடியாது என தவிர்க்கப்பட்ட பின்னலாடை அதிபர்களை அணுகி, தங்களிடம் ஆவணங்களை வழங்கினால் கடன் பெற்று தருவதாக உறுதியளித்துள்ளனர்.couple arrested duping businessmen fake documents india tamil news

இதனை நம்பிய தொழிலதிபர்கள், ஹாரூன் ரஷித், சிவப்பிரகாசம், ராமசாமி ஆகியோர் அந்த தம்பதியிடம் தங்களது ஆவணங்களை வழங்கியுள்ளனர்.

இந்த ஆவணங்களை தங்களுக்கு ஏற்றார் போல மாற்றி, போலி ஆவணங்களாக தயார் செய்த அந்த தம்பதி, அதனை வங்கியில் சமர்ப்பித்து ரூ.18 கோடி கடன் பெற்றுள்ளார்.

தொழிலதிபர்களுக்கு சொற்ப அளவு தொகையை வழங்கிய நிலையில், வங்கியில் இருந்து மொத்த தொகையையும் செலுத்த நிர்பந்தித்த போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, மூவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், இந்த மோசடியில் உடந்தையாக இருந்த வங்கி ஊழியர் சோமயாஜிலுவை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக இருந்த செந்தில் குமார், அவரது மனைவி பிரியா ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

இதில் தொடர்புடைய மேலும் சிலரையும் விரைவில் கைது செய்வோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :