தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் சாரல் விழா இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவை, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார்.evidence obtained ஹெச்.ராஜா arrested ops action india tamil news
இவ்விழாவை ஒட்டி, தோட்டக்கலை சார்பில் காய்கறிகளால் உருவாக்கப்பட்ட பாண்டா கரடி, கொக்கு, பழத்தில் பொறிக்கப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா, பென்னிக்குவிக் ஆகியோரின் உருவங்கள், வனத்துறை சார்பில் நடத்தப்படும் கண்காட்சி போன்றவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்தனர்.
சாரல் விழாவில் தப்பாட்டம், ஒயிலாட்டம், பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், மற்ற சமுதாயங்களைப் பற்றி கருணாஸ் தவறாகக் கூறியது தவறு என கூறினார்.
ஹெச். ராஜா கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த ஓ. பன்னீர் செல்வம், ஆதாரம் கிடைத்தால் கைது செய்யப்படுவார் என்று பதிலளித்தார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- திருடன் என நினைத்து 15 வயது சிறுவனை அடித்தே கொன்ற ஊர் மக்கள்!
- படுக்கைக்கு இணங்காததால் மனைவி மற்றும் குழந்தைகள் மீது தீ வைத்த கொடூரன்!
- கருணாஸை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு!
- திருமணமான சில நாட்களிலேயே புதுப்பெண் நகைகளுடன் மாயம்!
- இந்திய கைப்பேசிகளில் 30% ஆந்திராவில் தான் உற்பத்தியாகிறது! – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!