நிலுவை வரி 16 கோடி ரூபாவை செலுத்துமாறு இலங்கை மின்சார சபைக்கு உத்தரவு!

0
633

நிலுவை வரி பணமாக பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட வேண்டிய 16 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை செலுத்துமாறு இலங்கை மின்சார சபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Ceylon Electricity Board Tax Court Case Tamil News

இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் கொழும்பு பிரதான நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாத காலப்பகுதியினுள் குறித்த நிலுவை பணத்தை செலுத்தி நிறைவுறுத்துமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை மின்சார சபைக்கு எதிராக பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் தொடரப்பட்ட 6 வழக்குகள் மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites