ஏ9 வீதியில் சற்றுமுன்னர் கோர விபத்து; ஐவர் படுகாயம்

0
537

கிளிநொச்சி ஏ9 வீதி கரடிப்போக்கு சந்திக்கும் பரந்தன் சந்திக்கும் இடையில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளாகியதில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். (accident A9 road five injured)

இவ்வாறு காயமடைந்தவர்களை கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்களிலில் பயணித்தவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் இந்த விபத்து மாடு ஒன்று உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரந்தன் பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கன்டர் ரக வாகனம் ஒன்று, திடீரென குறுக்கே பாய்ந்த கட்டாக்காலி மாடு ஒன்றுடன் மோதுண்டு எதிர் திசையில் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முறுகண்டிப் பகுதியிலிருந்து வந்த சிற்றூர்ந்து வாகனம் ஒன்றுடனும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; accident A9 road five injured