ஜனாதிபதியை கொலை செய்யும் திட்டம் பொலிஸாரிடம் இருக்குமாயிருந்தால், சாதாரண மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சி கூறியுள்ளது. Police plot kill president Aluthgamage
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,
நேற்று (12) கண்டி பிரதேசத்தில் ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பான பல விடயங்களை வௌிப்படுத்தியதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கிழக்கு மாகாணத்தில் வைத்து கொலை செய்யும் திட்டம் சம்பந்தமாகவும் கருத்து வௌியிடப்பட்டுள்ளது.
இது மிகவும் பாரதூரமான கருத்து என்றும் எதிர்காலத்தில் பொலிஸார் சம்பந்தமாக எதுவித நம்பிக்கையும் இல்லை என்றும் அவர் கூறினார்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் நாலக சில்வாவை கைது செய்ய வேண்டும் என்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் விசாரணை செய்ய வேண்டும் என்றும், நாமல் குமாரவிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே கூறினார்.
இன்று நடைபெற்ற விஷேட அமைச்சரவை கூட்டத்திலும் இது சம்பந்தமாக பேசப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
tags :- Police plot kill president Aluthgamage
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இந்து ஆலயங்களில் இனி மிருக பலி பூஜை நடத்த தடை!
- ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
- உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவு!
- பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பில் மகிந்தவின் கருத்து!
- ராஜகிரியவில் இன்று ஆர்ப்பாட்டம்; நாளை வேலை நிறுத்தம்!
- எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!
- தற்போதைய அரசாங்கம் இராணுவத்தினரை பழிவாங்குகின்றது- கோட்டாபய ராஜபக்ஷ
- அகில இலங்கை கரப்பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வந்த மாணவர் பலி!
- வியட்நாமை சென்றடைந்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க!
- பரீட்சையில் சித்தியடைவதைப் போன்றே வாழ்க்கையிலும் மாணவர்கள் சித்தியடைய வேண்டும்!