எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!

0
596
Fuel price increase today

{ Fuel price increase today }
நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (ஐஓசி) தெரிவித்துள்ளது.

புதிய எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக நிதியமைச்சு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.

அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் 150 ரூபாவாகவும் 95 ஒக்டைன் பெற்றோல் 164 ரூபாவாகவும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, டீசல் 123 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 133 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுவதாகவும் ஐஓசி தெரிவித்துள்ளது.

Tags: Fuel price increase today

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites