{ example Sri Lankan Sinhalese cricket team }
இலங்கையின் வலைப்பந்தாட்ட அணி ஆசியாவில் மகத்தான சாதனை படைத்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு தமிழச்சிகள் என்பதால் (தர்ஜினி, எழிலேந்தினி) தமிழர்களாகிய நாம் மிகுந்த பெருமைகொள்கிறோம்.
தர்ஜினியின் அபாரத் திறமை சொல்லற்கரியது.
மண்ணிலே தர்ஜினி போல், எழிலேந்தினிபோல் ஏராளம் ஏராளம் வீரவீராங்கனைகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களையெல்லாம் தென்னிலங்கை கண்டுகொள்வதில்லை.
இனத்துவ விகிதாசார அடிப்படையில் கூட எம்மவர்க்கான வாய்ப்புக்கள் வழங்கப்படுவதில்லை.
நாம் தமிழர் என்ற ஒரேயொரு காரணம்தான் இந்நிலைக்கு காரணம்.அதனால்தான் திறமையே இல்லாத தனிச் சிங்கள வீரர்களைக்கொண்ட ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அணி அண்மைய ஆட்டங்களில் படுதோல்வியைச் சந்தித்து மண் கவ்வுகின்றது.
இனவாதத்தை விட்டுவிட்டு வெளியே வந்து, தர்ஜினி போல், எழிலேந்தினிபோல் ஆயிரமாயிரம் வீர வீராங்கனைகள் எம் மண்ணிலே தெரிவார்கள்! நாடு எந்தளவுக்கு முன்னேறும் என்பதை அதன் பின்னர் பாருங்கள்.
Tags: example Sri Lankan Sinhalese cricket team
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பது மிகவும் சுலபம்!
- மைத்திரி அரசாங்கம் அரசியல் எதிரிகளை பழிவாங்குகின்றது!
- பிரதமர் ஒருவருக்கான தகைமை ரணிலிடம் இல்லை என ஜனாதிபதி சிறிசேன என்னிடம் கூறினார்!
- பிக்பாஸ் பிரபலம் ஓவியா இன்று கொழும்பில்..
- நான்கு வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!
- மஹிந்த ராஜபக்ஷ இன்று இந்தியா பயணம்!
- துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!
- முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் ஆஜர்!
- நீதிபதியின் கையடக்கத் தொலைபேசி திருடிய நபர் கைது!
- கோட்டாபய ராஜபக்ஷ விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜரானார்!