வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் பெண்ணொருவர் கைது

0
660
TAMIL NEWS Attempt smuggle foreign currency worth 3 million

இலங்கையில் இருந்து வெளிநாட்டு நாணயத்தாள்களை இந்தியாவிற்கு கொண்டு செல்ல முற்பட்ட 60 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (woman arrested foreign currency notes)

இந்தியாவிற்கு வெளிநாட்டு நாணயத்தாள்களை சட்டவிரோதமாக எடுத்துச் செல்ல முற்பட்ட நிலையில், இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பில் வசிக்கும் 60 வயதான பெண் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இன்று காலை 4 மணியளவில் இந்தியாவிற்கு செல்வதற்கு முற்பட்ட போதே அவரின் பயணப்பொதியை சோதனை செய்த போது 37,27,344 ரூபா மதிப்புடைய அமெரிக்க டொலர், சுவிஸ் ப்ராங்க் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; woman arrested foreign currency notes