மஹிந்த ஜனாதிபதியாக வேண்டும் என்பதே மக்களின் அவா! கோத்தாவின் ஆருடம்!

0
500
Gotabaya Rajapaksa Said People Wish Mahinda Become President

நேற்று (05) கொழும்பில் நடைபெற்ற , கூட்டு எதிரணியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தார். Gotabaya Rajapaksa Said People Wish Mahinda Become President Tamil News

கூட்டு எதிர்க் கட்சியினால் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொழும்புக்கு வருகை தந்துள்ளதாகவும் இந்த மக்கள் தெரிவிக்கும் கருத்தின்படி நாம் அடுத்த கட்ட திட்டமிடலை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில் ,

இங்கு வருகை தந்துள்ள ஒவ்வொருவரும் மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டில் மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். இந்த நாட்டை சிறந்த முறையில் நிருவகிக்கவும், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும், நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பாதால உலக குழுவினரை இல்லாதொழிக்கவும், ஒரு சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்பவும் மஹிந்த ராஜபக்ஷவினால் மட்டுமே முடியும் என்பதையே இந்த மக்கள் வெள்ளம் தெரிவிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites