12 மணிக்கு பின்னரே இடத்தை அறிவிப்போம்! கூட்டு எதிரணி அடாவடி!

0
510

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் இன்று நடத்த உள்ள மக்கள் எழுச்சி பேரணி எவ்விடத்தில் ஆரம்பமாகும் என்பதை இன்று நண்பகல் 12 மணிக்கு பின்னரே அறிவிப்போம் என கூட்டு எதிரணி சற்று முன்னர் தெரிவித்துள்ளது. Sri Lanka Joint Opposition Party Announce Protest Place After 12 Tamil News

ஒன்றினைந்த எதிர்க்கட்சி இன்று கொழும்பில் முன்னெடுக்க உள்ள அரசாங்கத்துக்கு எதிரான பேரணி, கொழும்பில் எந்த இடத்தில் ஆரம்பமாகும் என இதுவரையில் அறிவிக்காது இரகசியத்தை பேணி வருகிறது கூட்டு எதிரணி, இந்நிலையில் கூட்டு எதிரணி வெளியிட்டுள்ள
ஊடக அறிக்கையில், பேரணியில் பங்கேற்க உள்ள எமது ஆதரவாளர்கள் கொழும்பை நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

திட்டமிட்ட வகையில் எமது பேரணி இன்று நடைபெறும். இன்று பகல் 12 மணிக்கு பின்னரே பேரணி ஆரம்பமாகும் இடத்தை அறிவிப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites