உச்சக்கட்ட பரபரப்பில் கொழும்பு: விடிய விடிய போராட்டம்!

0
698
உச்சக்கட்ட பரபரப்பில் கொழும்பு: விடிய விடிய போராட்டம்

கொழும்பில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டப் பேரணிக்கு வெளி மாவட்டங்களில் இருந்து வருவோர் இன்று கொழும்பிலேயே தங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Mahinda Colombo Protest

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள அரசாங்கத்துக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் சுமார் 75 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கொழும்பின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸார் நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை கொழும்புக்கு வரும் தமது ஆதரவாளர்கள் மீது அரசு குண்டர்களை ஏவி, ஆர்ப்பாட்டத்தை முடக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கலாம் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் எங்கு ஆரம்பிக்கும் என்பது உறுதியாக தெரிவிக்கப்படாத போதிலும், பல பொது மைதானங்கள் மஹிந்த தரப்பினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இரவும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி நாளைய தினம் வரை அதனைத் தொடர பொது எதிரணியினர் எதிர்ப்பார்த்திருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.