மன்னாரில் வீட்டினுள் புகுந்த முதலை பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு

0
471
Crocodile capture mannar

மன்னார் சின்னக்கடை தெற்கு வயல் வீதி பகுதியில் உள்ள வீட்டினுள் உட்புகுந்த முதலை ஒன்றை அப்பகுதி மக்கள் இணைந்து பிடித்துள்ளனர். (Crocodile capture mannar)

மன்னார் சின்னக்கடை தெற்கு வயல் வீதியில் புனரமைப்பு செய்யப்பட்ட குளத்தில் அதிகளவான தாமரை காணப்படுகின்ற நிலையில், இந்தக் குளத்தில் முதலைகள் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த குளத்தில் காணப்பட்ட முதலை ஒன்று நேற்றிரவு 11 மணியளவில் குளத்தில் இருந்து வெளியில் வந்து அருகில் உள்ள வீட்டினுள் செல்ல முயன்றுள்ளது.

இதன்போது குறித்த முதலையை அவதானித்த அப்பகுதியில் உள்ள வளர்ப்பு நாய்கள் குரைத்துள்ள நிலையில் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் வந்து பார்த்த போது, வீட்டு வாசலில் முதலையை கண்டுள்ளனர்.

சுமார் 5 அடி நீளம் கொண்ட குறித்த முதலையை பிடிக்க முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், இன்று குறித்த முதலை உயிருடன் பிடிக்கப்பட்டு கட்டி வைக்கப்பட்டு மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Crocodile capture mannar