நாளைய தினம் ஒன்றிணைந்த எதிரணி நடத்தவுள்ள போராட்டம் குறித்து உதய கம்மன்பிலவின் அறிக்கை!

0
602
Udaya Kammanpilai statement struggle

{ Udaya Kammanpilai statement struggle }

கொழும்பில் நாளைய தினம் ஒன்றிணைந்த எதிரணி நடத்தவுள்ள போராட்டம் தொடர்பில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இதன்போது மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்கள் தொடர்பில், ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு தெளிவுப்படுத்தப்படவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இந்த தகவலை எமது செய்தி சேவைக்கு வழங்கினார்.

இதேவேளை, இந்த பேரணி தொடர்பில் பிரதமர் தலைமையில் நேற்றைய தினம் அலரி மாளிகையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கின்ற அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

இந்த பேரணி நடத்தப்படவுள்ள இடம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாத நிலையில், அதுதொடர்பில் நேற்றைய கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Tags: Udaya Kammanpilai statement struggle

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites