நாமல் பேபியை ஜனாதிபதியாக்கவே கொழும்பில் போராட்டம் நடத்தப்படுகிறது! – ரணில் குற்றச்சாட்டு

0
443
TAMIL NEWS Ranil Wickramasinghe explained maneuvering plan Mahinda

(TAMIL NEWS Ranil Wickramasinghe explained maneuvering plan Mahinda)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சூழ்ச்சித் திட்டம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை அடுத்த ஜனாதிபதியாக்கும் முயற்சியில் மஹிந்த ராஜபக்ஸ ஈடுபட்டுள்ளார்.

அதற்கான நடவடிக்கையின் ஒரு முயற்சியாக நாளை கொழும்பை ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மஹிந்த அணியினரால் நாளை நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பில் எழுப்பப்பட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இன்று (04) இந்த கருத்தை வெளியிட்டார். இது புரியாமல் ஏனையோர் பின்னால் அவரிடம் திரிகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ராஜபக்ஸ படையணியில் அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. கோட்டாபய, பசில் ராஜபக்ஸ எனப் பல அணிகள் பிரிந்துள்ளன.

இந்தநிலையில், நாமல் பேபியை அடுத்த தலைவராக்கவே அண்மைக்காலமாக இந்த முயற்சிகள் இடம்பெறுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

(TAMIL NEWS Ranil Wickramasinghe explained maneuvering plan Mahinda)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites