புன்னைச்சோலையில் தாயும் மகனும் காணாமல் போயுள்ளனர்

0
539
mother son disappeared Batticaloa punnaicholai

மட்டக்களப்பு புன்னைச்சோலை கிராமத்தை சேர்ந்த தாயும் மகனும் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (mother son disappeared Batticaloa punnaicholai)

இதுகுறித்து மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு புன்னச்சோலை பகுதியை சேர்ந்த தர்ஷன் ஜோதிமலர் என்ற தாய் மற்றும் அவருடைய நான்கு வயது மகன் ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் இவர்கள் வீட்டில் இருந்த போது, காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

காணாமல் போயுள்ள குறித்த பெண்ணின் கணவர் மத்திய கிழக்கு நாடொன்றில் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையில் மட்டக்களப்பு பொலிஸார் ஈடுபட்டுவரும் நிலையில், அவர்களை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த இருவர் தொடர்பாக தகவல் அறிந்தவர்களை 06522244 23 என்ற மட்டக்களப்பு பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; mother son disappeared Batticaloa punnaicholai