“அரசாங்கங்களை கட்டுப்படுத்தும் போதைப்பொருள்” : மைத்திரி

0
466
Maithiripala Sirisena Drug Problem

பிள்ளைகளையும், புதிய தலைமுறையினரையும் சீரழித்து வரும் போதைப்பொருளானது அனைத்து நாடுகளினதும் எதிர்காலத்திற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. Maithiripala Sirisena Drug Problem

கல்வியறிவை பின்னடையச் செய்துள்ளது. சட்ட விரோத போதைப் பொருளைப்போன்று பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சட்ட பூர்வமானது என அடையாளப்படுத்தப்படும் போதைப் பொருள்களும் இந்த நிலமைக்குக் காரணமாக அமைக்கின்றது.

இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்­ளார்.நேபா­ளத்­தின் தலை­ந­கர் காத்­மண்­டு­வில் நான்­கா­வது பிம்ஸ்­டெக் உச்சி மாநாடு இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அரச தலை­வர் இத­னைத் தெரி­வித்­தார். இவ்­வாறு அரச தலை­வர் ஊட­கப்­பி­ரிவு அனுப்பி வைத்­துள்ள அறிக்­கை­யில் தெரி­வி்க்­கப்­பட்­டுள்­ளது.

அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

பிம்ஸ்­டெக் உறுப்பு நாடு என்ற ரீதி­யில் இம்­மா­நாட்­டில் மகிழ்ச்­சி­யு­டன் கலந்­து­கொள்­கி­றோம். இன்­றைய கால கட்­டத்­தில் அனைத்து அர­சு­க­ளும் நாட­ளா­விய ரீதி­யி­லும் வலய ரீதி­யி­லும் பன்­னாட்டு ரீதி­யி­லும் முகங்­கொடுக்­கும் பிரச் சி­னை­கள் ஒன்­றோ­டொன்று தொடர்­பு­டை­ய­தா­கவே விளங்­கு­ கின்­றது.

எமக்கு முகங்­கொ­டுக்க நேர்ந்­துள்ள பொரு­ளா­தார, அர­சி­யல், சமூக ரீதி­யான பிரச்­சி­னை­கள் ஒன்­றுக்­கொன்று சம­மா­கவே காணப்­ப­டு­கின்­றன. பல உலக நாடு­கள் முகங்­கொ­டுக்­கும் பிரச்­சி­னை­க­ளுக்கு எமது பிம்ஸ்­டெக் உறுப்பு நாடு­க­ளும் முகங்­கொ­டுக்க நேர்ந்­துள்­ளது.என்று அரச தலை­வர் தெரி­வித்­தார்.

இன்று உல­கில் கால­நிலை மாற்­றத்­து­டன் முகங்­கொ­டுத்­துள்ள முக்­கிய பிரச்­சினை வறு­மை­யா­கும். வறுமை அதி­க­ரிப்­புக்குப் போதைப்­பொ­ருள் முக்­கிய கார­ணம் எனச் சுட்­டிக்­காட்­டிய அரச தலை­வர் போதைப்­பொ­ருள் பிரச்­சினை முழு மனித சமூ­கத்­திற்­கும் பெரும் சவா­லாக மாறி­யுள்­ள­தா­க­வும் குறிப்­பிட்­டார். உல­கின் அனைத்து நாடு­க­ளி­லும் உள்ள பாட­சாலை மாண­வர்­கள் முதல் அனை­வ­ரும் முகங் கொடுத்­தி­ருக்­கும் பெரும் பிரச்­சி­ னை­யாக இது உள்­ளது.

உல­கில் அர­சு­களை அமைப்­ப­தற்­கும் அர­சு­களை வீழ்த்­து­வ­தற்­கும் அர­சியல்­வா­தி­களை அதி­கா­ரத்­தி­லி­ருந்து கீழி­றக்­கு­வ­தற்­கும் தமக்கு வேண்­டிய அர­சி­யல்­வா­தி­களை அதி­கா­ரத்­துக்­குக் கொண்­டு­வ­ர­வும் சட்­ட­வி­ரோ­தப் போதைப்­பொ­ருள் கடத்­தல்­கா­ரர்­கள் முக்­கிய பங்கு வகிக்­கின்­ற­னர்.

நல்­லாட்சி எண்­ணக்­க­ரு­வின் அடிப்­ப­டை­யில் ஜன­நா­யக முறை­மையை ஏற்­ப­டுத்தி மனித சுதந்­தி­ரம், அடிப்­படை உரி­மை­கள், ஊட­கச் சுதந்­தி­ரம் என்­ப­வற்றை உறு­திப்­ப­டுத்தி செயல் ப­டும் அர­சி­யல் முறைமை பற்றி முழு மனித சமூ­க­மும் நம்­பிக்கை வைத்­துள்­ளது. என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

இலங்­கை­யில் கடந்த மூன்­றரை வருட காலப்­ப­கு­தி­யில் நாம் ஜன­நா­ய­கத்தைப் பலப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றோம் எனக் குறிப்­பி­டு­வ­தை­யிட்டு மகிழ்ச்­சி­ய­டை­கி­றேன்.பக்க சார்­பின்றி அர­சி­யல் கட்சி வேறு­பா­டு­கள் இன்றி ஆளுங்­கட்சி, எதிர்க்­கட்சி என்ற பாகு­பா­டு­கள் இன்றி ஊழ­லில் ஈடு­ப­டு­கின்­ற­வர்­க­ளுக்கு எதி­ரா­கத் தீர்­மா­னங்­களை மேற்­கொள்­வ­தற்கு சட்­டத்துக்கு இட­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

இன்று மனித சமூ­கம் முகங்­கொ­டுத் துள்ள பிரச்­சி­னை­கள், ஒவ்­வாரு நாட்­டை­யும் பாதிக்­கின்ற பிரச்­சி­னை­கள், பிராந்­திய ரீதி­யா­க­வும் பன்­னாட்டு ரீதி­யா­க­வும் ஏற்­ப­டு­கின்ற பிரச்­சி­னை­கள் பிராந்­தி­யத்­தில் ஏற்­ப­டுத்­தும் தாக்­கங்­கள் எவை? எமது நட்பு நாடு­களை அவை எவ்­வாறு பாதிக்­கின்­றன? இந்த விட­யங்­கள் தொடர்­பில் தெளி­வான புரிந்­து­ணர்­வு­ட­னும் தெளி­வான நிக்ச்­சித் திட்­டங்­க­ளு­ட­னும் நாம் முன்­னே­றிச் செல்­ல­வேண்­டும் என்­றும் அரச தலை­வர் தெரி­வித்­தார்.

எமது தனித்­து­வ­மான பாரம்­ப­ரிய கலா­சார மர­பு­ரி­மை­கள், பண்­பா­டு­கள் நாம் கட்­டி­யெ­ழுப்­பி­யி­ருக்­கின்ற கடந்­த­கால அனு­ப­வங்­க­ளு­டன் மனித சமூ­கத்­தின் முன்­னேற்­றத்­திற்­கா­க­வும் எதிர்­கா­லத்­திற்­கா­க­வும் எதிர்­பார்ப்­பு­க­ளு­டன் கூடிய வகை­யில் முன்­னே­றிச் செல்­கின்­ற­போது அந்த உறு­தி­யான பய­ணத்­திற்கு பிம்ஸ்­டெக் மாநாடு பல­மான அடித்­த­ள­மாக உள்­ள­து என்றும் அரச தலைவர் தெரிவித்தார்– என்றுள்ள னர்.

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites