நான் ‘ஆச்சாரமான பிராமணர்’ மல்லையா : பிராமணர் சங்கத்தினர் கொதிப்பு

0
795
orthodox brahmin vijay mallaiya brahmin community boiling tamil news

சாராய ஆலை முதலாளியான விஜய் மல்லையா, இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடியை சுருட்டிக்கொண்டு வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டுவர சிபிஐ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.orthodox brahmin vijay mallaiya brahmin community boiling tamil news

இந்நிலையில், இந்தியச் சிறையில் தனக்கு போதுமான வசதிகள் செய்துதரப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த மல்லையா, “நான் ஒரு ஆச்சாரமான பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவன்; எனவே எனக்கு சுத்தமான சிறை வேண்டும்” என்று அதற்கான காரணத்தையும் கூறியிருந்தார்.

இந்திய அரசும், “மல்லையாவுக்காக மும்பை ஆர்தர் சாலை சிறைச்சாலையில்- 3 பேன், வெஸ்டர்ன் மாடல் டாய்லெட், 40 இன்ச் எல்சிடி டிவி, மருத்துவ வசதி, நூலகம் ஆகிய வசதிகளுடன் சுத்தமான அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று லண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதுஒருபுறமிருக்க, மல்லையா தன்னை ஆச்சாராமான பிராமணர் என்று கூறியதற்காக, ஏனைய பிராமணர்கள் கொதித்துள்ளனர். “மல்லையா ஒரு மோசடிப் பேர்வழி, பெண்களுடன் ஆபாசமாக தோன்றுபவர், மது குடிப்பவர், அவர் எப்படி தன்னை பிராமணர் என்று கூறலாம்?” என்று ஆவேசப்பட்டுள்ளனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :