நான்கு தேரர்களுக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை உத்தரவு

0
487
Monks Court Case

அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நான்கு தேரர்களுக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.  Monks Court Case

பெங்கமுவெ நாளக தேரர், மாகல்கந்தே சுதத்த தேரர், இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மற்றும் மெடில்லே பன்யலோக தேரர் ஆகியோருக்கு எதிராகவே பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற அங்கவீனமுற்ற இராணுவத்தினரின் போராட்டத்தின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பான வழக்கில் குறித்த தேரர்கள் சந்தேகநபர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை