சவால்கள் வந்தாலும் நாட்டை பாதுகாத்து நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது; ரணில்

0
716
government working protect country despite challenges

2015 ஆம் ஆண்டில் மாற்றத்திற்காக வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காகவே மைத்திரி – ரணில் அரசாங்கம் பாடுபடுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். (government working protect country despite challenges)

அத்துடன், எந்தவித சவால்கள் வந்தாலும் நாட்டைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்யும் மூலநோக்கத்துடன் சமகால நல்லாட்சி அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மொனராகலையில் நேற்றைய தினம் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா தேசிய கண்காட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து பிரதமர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் மூலம் தெளிவாகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெளிவாக உணரக்கூடிய மாற்றத்தை கிராமப் புறங்களுக்கும் கொண்டு செல்வதற்கு என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா திட்டத்திற்கு ஆற்றல் கிடைத்திருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கண்காட்சியின் சகல காட்சிக் கூடங்களுக்கும் விஜயம் செய்த பிரதமர் பொதுமக்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; government working protect country despite challenges