“சிங்களத் தலைமைகள் மிகத்தெளிவான கொள்கையுடன் உள்ளார்கள்”

0
433
Sri Lankan national issue

இந்த நாடு சுதந்திரமடைந்த நாள் தொடக்கம் சிங்களத் தலைமைகள் மிகத்தெளிவான கொள்கையுடன் உள்ளார்கள். வடக்கு கிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் மண்ணை, முழுமையான குடிப்பரம்பலை மாற்றவேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்படுகின்றார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார் Sri Lankan national issue 

மகாவலி அதிகார சபைக்கு எதிராக நேற்று முல்லைத்தீவில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

இந்த மகாவலித் திட்டம் மூலம் எங்கள் தாயக பூமியை இரண்டு கூறாக ஆக்கி விடலாம் என்ற ஒரு நினைப்பில் இந்த அரசும், இதற்கு முன்னர் இருந்த அரசும் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. இந்தப் பேரணியில் உள்ள மக்களைக் கண்டால் அவர்கள் நினைப்பை மாற்றிக்கொள்வார்கள்.

இவ்வளவு பெருந்திரளான மக்கள் எங்கள் நிலங்களைப் பறிகொடுக்கமாட்டோம் என்று மிகத்தெளிவாகக் கூறுகின்றார்கள் என்பதை அரசுக்கு மாத்திரம் அல்ல உலகுக்கும் காட்டியுள்ளோம் – என்றார்.

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை