கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு; கொலையா என சந்தேகம்

0
708
Dead body recovery murder suspect

கந்தகெட்டிய – மொரஹேல – மீகொல்ல பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. (Dead body recovery murder suspect)

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் கந்தகெட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலமொன்று காணப்படுவதாக கந்தகெட்டிய பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 ஆம் திகதி முதல் காணாமல் போன 31 வயதுடைய கெட்டவத்த, மீகஹாகியூல பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாகவும் இதுவொரு கொலையாக இருக்கக்கூடும் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் பிரேத பரிசோதனைகள் இன்றைய தினம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கந்தகெட்டிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Dead body recovery murder suspect