“பிரபாகரனின் உடலிலிருந்து சீருடையை அகற்றுமாறு சரத்பொன்சேகாவே உத்தரவிட்டார்”- சசிகலகே!

0
462
sasikalage announce sarathponseka

{ sasikalage announce sarathponseka }
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலிலிருந்து சீருடையை அகற்றுமாறு சரத்பொன்சேகாவே உத்தரவிட்டார்” என ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி சசிகலகே சிங்கள பத்திரிக்கை ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில், பிரபாகரனின் உடலில் சீருடையை விட்டுவைத்ததட்காக சரத் பொன்சேகா இராணுவ அதிகாரிகளை ஏசினார்.

பிரபாகரனின் உடம்பு தொலைக்காட்சிகளில் வெளியானபோது அது சீருடையுடன் காணப்பட்டது. இதனை பார்த்த சரத்பொன்சேகா மிகவும் கோபமடைந்தார். பின்பு அவரது சீருடையை அகற்ற உத்தரவிட்டார்.

இதன் பின்னர் நான் பிரபாகரனின் உடலை முகாமிற்கு எடுத்து சென்று சீருடையை அகற்றிய பின்னர் மீண்டும் அந்த இடத்திற்க்கு கொண்டு வந்தேன்” என்று கூறியுள்ளார்.

சசிகலகே இறுதி யுத்தத்தில் படையணியை வழிநடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: sasikalage announce sarathponseka

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites