(Speaker act constitution Parliamentary Approval PC election)
மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணய குழுவின் அறிக்கைக்கு நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைக்காமையால் சபாநாயகர் அரசியலமைப்புக்கமைய செயற்படுவது அவசியமாகும்.
இது குறித்து நாடாளுமன்ற குழுநிலைக் கூட்டத்தில் அண்மையில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
எந்தக் காரணத்திற்காகவும் மாகாண சபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக்கூடாது என சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.
கட்சித் தலைவர்களுக்கு மேலதிகமாக தேர்தல்கள் ஆணைக்குழு எல்லை நிர்ணய ஆணைக்குழு என்பனவற்றின் தலைவர்களுடன் சபாநாயகர் கலந்துரையாடினார்.
சபாநாயகரால் பிரதமர் தலைமையில் பெயரிடப்படவுள்ள குழு இந்தப் பரிந்துரையில் ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் வழங்குமாயின் அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான முழுமையான ஆதரவை வழங்குவதாக கட்சிகளின் தலைவர்கள் அறிவித்தார்கள்.
இதற்கமைய கட்சிப் பிரதிநிதிகளின் அங்கீகாரத்துடன் ஐந்து பேர் அடங்கிய குழுவை சபாநாயகர் அறிவிக்கவுள்ளார்.
பிரதமர் தவிர்ந்த குழுவில் அங்கம் வகிக்கவிருக்கும் ஏனைய உறுப்பினர்கள் துறைசார் புத்திஜீவிகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
(Speaker act constitution Parliamentary Approval PC election)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பேஸ்புக் ஊடாக பல பெண்களை ஏமாற்றிய வைத்தியர் கைது
- தமிழர்கள் அடிமையாக்கப்பட்டதனால் தான் பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார்; சிறீதரன்
- முல்லைத்தீவில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவி கடத்தி பாலியல் துஷ்பிரயோகம்
- கோட்டபாய உள்ளிட்ட 4 பேருக்கு அதிரடி அறிவிப்பு
- 79 வயது தாயின் கன்னத்தில் அறைந்த மகள் கைது
- வீதியை விட்டு விலகிய வாகனம் பள்ளத்தில் பாய்ந்து விபத்து
- ஆட்டுத் தொழுவத்தில் 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்