{ boat Vajpayee Ashtis collapsed }
உத்தரபிரதேசத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தியை கரைக்க சென்றபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி மரணம் அடைந்தார். மறுநாள் 17-ந்தேதி அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
வாஜ்பாய் அஸ்தியை நாடு முழுவதும் உள்ள நதிகளில் கரைக்க பா.ஜ.க. முடிவு செய்தது. அதன்படி கடந்த 22-ந்தேதி அனைத்து மாநில பா.ஜனதா முக்கிய நிர்வாகிகளை டெல்லிக்கு வரவழைத்து பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரால் வழங்கப்பட்டது.
வாஜ்பாய் அஸ்தியை கரைக்கும் பணியில் பா.ஜனதாவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி ஆற்றில் வாஜ்பாய் அஸ்தியை கரைக்க பா.ஜனதா நிர்வாகிகள் படகில் சென்றனர். முன்னாள் மாநில பா.ஜனதா தலைவர் ராம் திரிபாதி, எம்.பி. ஹரிஷ் திரிவேதி, எம்.எல்.ஏ. ராம் சவுத்ரி, மற்றும் மூத்த நிர்வாகிகள், போலீஸ் சூப்பிரண்டு திலீப்குமார் உள்பட பலர் படகில் இருந்தனர்.
அதிகமான கூட்டத்தால் ஆற்றில் சென்ற சிறிய படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகு கவிழ்ந்ததால் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் தடுமாறி ஆற்றில் குதித்தனர். உடனே போலீசார் ஆற்றுக்குள் குதித்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலரை காப்பாற்றினர்.
இந்த விபத்தில் அனைவரும் உயிர் தப்பினர். யாரும் ஆற்றில் மூழ்காமல் போலீசார் காப்பாற்றினார்கள்.
Tags: boat Vajpayee Ashtis collapsed
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- மாட்டிறைச்சி சாப்பிட்டதால்தான் கேரளாவில் வெள்ளம் – பாஜக எம்.எல்.ஏ!
- சிறையில் மல்லையாவிற்கு வழங்கப்பட உள்ள வசதிகள் குறித்து மத்திய அரசு விளக்கம்!
- சர்வாதிகாரத்துக்கு எதிராக இந்திய மக்கள் போராட வேண்டும் – அமர்தியா சென்!
- சாலையோரம் சிறுவனின் சடலம் மீட்பு!
- மாநகர பஸ்களில் சீசன் டிக்கெட் கட்டணம் உயருகின்றது!
- கோவை ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது: தமிழகத்தில் இருந்து ஒரு ஆசிரியர் மட்டும் தேர்வு!
- திமுக தலைவர் பதவிக்கு தேர்தல்: கருணாநிதி சமாதியில் ஆசி பெரும் ஸ்டாலின்!
- நிவாரண பொருட்கள் வழங்க சென்ற சீமான் கேரளாவில் கைது!
- “மக்கள் விரும்பினால் மீண்டும் முதல்வர் ஆவேன்” – கர்நாடக முன்னாள் முதல்வர்ண் மாவட்ட ஆட்சியர்