கல்லால் தாயின் தலையை பதம் பார்த்த மகன் – காரணம் கவலைக்குரியது…!

0
674
son attack mother stone hatton bogawanthalava latest news local

பொகவந்தலாவையில் தாயை தாக்கிய மகன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். son attack mother stone hatton bogawanthalava latest news local

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசியை தாங்கிக்கொள்ள முடியாமல் தாயை தாக்கியுள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மகனான சிறுவனுக்கு 11 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

சுகயீனம் காரணமாக உறங்கிக்கொண்டிருந்த தன்னை தனது மகன் இன்று காலை இவ்வாறு தாக்கியதாக தாக்குதலுக்கு உள்ளான தாய் குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவர் கொழும்பில் பணிபுரியும் நிலையில் , தனது மூத்த மகன் பாடசாலை செல்லாமல் கூலி வேலைகள் செய்து வருவதாக அவர் காவற்துறைக்கு வழங்கிய முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கணவர் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வருவதாகவும் , அவர் கொடுக்கும் பணம் வீட்டு செலவுகளுக்கு போதாமையினால் மூத்த மகன் இவ்வாறு கூலி வேலைகளை செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் , தனது மகன் இன்று உணவு கேட்ட போது வீட்டில் உணவிற்கு ஒன்றும் இல்லாததால் கோபத்தில் கல்லொன்றை எடுத்து தாக்கியதாக அவர் கூறியுள்ளார்.

காயமடைந்த பெண் பொகவந்தலாவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , கைது செய்யப்பட்டுள்ள மகன் நாளைய தினம் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொகவந்தலாவை பொலிசார் தெரிவித்தனர்.
son attack mother stone hatton bogawanthalava latest news local

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites