காணி தொடர்பான உரித்து ஆவணங்கள் இருப்பின் அடுத்த தவணையின் போது நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு, நாவற்குளிப் பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் அத்துமீறிக் குடியேறியுள்ள குடும்பங்களுக்கு சாவகச்சேரி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. Navatkuli Land Issue
நாவற்குளியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் அத்துமீறிக் குடியேறியுள்ள 62 குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு அதிகார சபையின் தலைவர், சாவகச்சேரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. குடியிருப்பாளர்கள் குடியிருக்கும் காணி தொடர்பான உரித்து ஆவணங்கள் இருப்பின் அடுத்த தவணையில் நீதிமன்றில் சமர்ப்பிக்கமாறும், வழக்குகளை ஒக்டோபர் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வவுனியாவில் கைக்குண்டு மீட்பு
- சவால்கள் வந்தாலும் நாட்டை பாதுகாத்து நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது; ரணில்
- மட்டக்களப்பில் யானை தாக்குதலில் ஆணின் சடலம் மீட்பு
- மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்
- அரசாங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசம்
- ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது
- பதவி விலகினார் ஆறுமுகன் ; அனுஷியாவிற்கு பொதுச் செயலாளர் பதவி
- வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் எங்கே? மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி