எமது மண்ணில் எம்மை நாமே ஆள விரும்புகின்றோமா என தமிழ் மக்களிடத்தில் பொது வாக்கெடுப்பை நடத்திய பின்னர், இவ்வாறான கருத்துக்களை வெளியிடத் தயாரா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சவால் விடுத்துள்ளார். (Parliament Member Sridharan comments sarath fonseka opinion)
இராணுவத்தின் முன்னாள் தளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகா பெரும்பான்மை மக்கள் அதிகாரப் பரவலாக்கத்தை விரும்பவில்லை என்ற கருத்தை அண்மையில் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், கிளிநொச்சி பிரமந்தனாறு வட்டாரத்தின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூலக் கிளைத் தெரிவின் போது கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, சரத்பொன்சேகாவின் கருத்து தொடர்பில் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில், தமிழர்கள்களாகிய நாம் இந்த மண்ணினுடைய பூர்வீக குடிகளாக வாழ்ந்து வருகின்றோம். இந்த மண்ணிலே ஆங்கிலேயரின் வருகைக்கு முன்பாக நாம் இந்த மண்ணிலே தனியான இராசதானிகளுடன் எம்மை நாமே ஆண்டவர்கள்.
சுதந்திரத்தின் பின்னர் இந்த நாட்டில் அடிமையாக நடத்தப்பட்டு வருகின்றோம். நாம் அடிமைகளாக நடத்தப்பட்டதை உணர்ந்தமையினால் தான் எமது தலைவர் பிரபாகரன் ஆயுதம் ஏந்தி எமது இனத்தின் அடிமைத்தனத்தை போக்க விளைந்தார்.
ஆயுதப் போராட்டத்தை எமது இளைஞர்கள் ஆரம்பிப்பதற்கு முன்பே எமது மக்கள் தமிழீழம் தான் தமிழர்களின் இறுதித் தீர்வு என 1977 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலின் போது மக்கள் வாக்களித்தார்கள்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுற்றதன் பின்னர் புலம்பெயர்ந்து வாழ்கின்ற எம்மவர்களிடம் நடத்தப்பட்ட வாக்களிப்பிலும் தமிழீழத்திற்காக வாக்களித்திருந்தார்கள்.
தனிநாடு கோருவதற்கு முழு உரிமையும் கொண்ட நாம் யதார்த்த நிலை உணர்ந்து ஒன்று பட்ட நாட்டுக்குள் எமக்குரிய அதிகாரங்களை கேட்கின்ற வேளையில் சிங்கள ஆட்சியாளர்கள் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.
பொன்சேகா, கோட்டபாய ராஜபக்ச போன்றோரினால் வெளியிடப்படும் இனவாதக் கருத்துக்களுக்கும் பதிலளிக்கும் வகையில் நாங்கள் எமது மண்ணில் எம்மை நாமே ஆள விரும்புகின்றோமா என எங்கள் மக்களிடத்தில் பொது வாக்கெடுப்பை நடத்திய பின் இவ்வாறான கருத்துக்களை வெளியிடத் தயாரா என்றும் கேள்வியெழப்பியுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பேஸ்புக் ஊடாக பல பெண்களை ஏமாற்றிய வைத்தியர் கைது
- ஜனாதிபதி தேர்தல்; சங்கக்காரவின் பெயர் முன்னிலை – ஐரோப்பிய பிரதிநிதிகள் சந்திப்பு
- 19 வயது பெண்ணை பாலியல் துஷ்பிரயோகப்படுத்த முயற்சி
- 13850 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் ஐந்து பேர் கைது
- கிளிநொச்சி மாணவி பலி; இருதயத்தில் கிருமித் தொற்று காரணம்
- வீதியை விட்டு விலகிய வாகனம் பள்ளத்தில் பாய்ந்து விபத்து
- ஆட்டுத் தொழுவத்தில் 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Parliament Member Sridharan comments sarath fonseka opinion