கொக்குவில் சம்பியன் வீதியில் உள்ள மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் இரவு புகுந்த கும்பல் ஒன்று அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்ட பின்னர் தப்பிச் சென்றது. Jaffna Kokuvil Doctor Home Attack Accuse Bail Tamil News
குறித்த மருத்துவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் (செவ்வாய்க்கிழமை) குறித்த வழக்கு விசாரணைகள் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த சந்தேகநபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்பதால் அவரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் மருத்துவர் இமானுவேல் சாந்தகுமார், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், தாக்குதலுடன் தொடர்புடைய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் அரசடிப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு புதிய தகவல்; அமைச்சரவையில் தீர்மானம்
- ஜனாதிபதி தேர்தல்; சங்கக்காரவின் பெயர் முன்னிலை – ஐரோப்பிய பிரதிநிதிகள் சந்திப்பு
- 19 வயது பெண்ணை பாலியல் துஷ்பிரயோகப்படுத்த முயற்சி
- 13850 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் ஐந்து பேர் கைது
- கிளிநொச்சி மாணவி பலி; இருதயத்தில் கிருமித் தொற்று காரணம்
- வீதியை விட்டு விலகிய வாகனம் பள்ளத்தில் பாய்ந்து விபத்து
- ஆட்டுத் தொழுவத்தில் 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்