யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது, 30 பைக்கட்டுக்களாகப் பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் மாவா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன. Jaffna Police Captured MAVA Drugs Third Time Tamil News
குறித்த போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட இளைஞர்களுக்கு மாவா போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் பொலிஸ் பிரிவிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அத்துடன் அவரிடம் மீட்கப்பட்ட மாவா போதைப் பொருளும் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை ஐந்து சந்தி கேக் விற்பனை நிலையம் கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதியும் கடந்த 7ஆம் திகதியும் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்ட போது, பெருமளவு மாவா போதைப்பொருள் கைப்பட்டப்பட்டதுடன் அதனை தயாரிக்கும் மூலப்பொருட்கள் மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- அரசாங்கத்திடம் இருந்து முஸ்லிம்களைப் பிரிக்க தீய சக்திகள் முயற்சி
- ஞானசார தேரருக்கு இன்று சத்திரசிகிச்சை
- யாழில் பொலிஸாருக்கு சவால் விட்ட ரௌடிக் கும்பல்; மீண்டும் அட்டூழியம்
- சிவனொளிபாதம் புத்தரின் பாதமானது; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
- கிளிநொச்சி மாணவி பலி; இருதயத்தில் கிருமித் தொற்று காரணம்
- கேரளா மக்களுக்காக தமிழ் நாட்டு சிறுவர்களின் வியப்பூட்டும் இளகிய மனம் (காணொளி இணைப்பு)
- ஆட்டுத் தொழுவத்தில் 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்