(Train fares hiked first time 10 years Transport ministry tamilnews)
கடந்த 10 ஆண்டுகளின் பின்னர் புகையிரத கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொதுப் போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் புகையிரத கட்டணங்களை அதிகரிக்க அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கான வர்த்தமானி அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளதாக குறித்த அமைச்சின் செயலாளர் பீ.எஸ்.விதானகே தெரிவித்துள்ளார்.
புதிய புகையிரத கட்டண திருத்தத்தின் அடிப்படையில் 15% ஆல் புகையிரத கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளன.
குறித்த கட்டண திருத்தம் தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த திருத்தத்தின் போது குறைந்த பட்ச கட்டணமான 10 ரூபாவில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
2008 ஆம் ஆண்டிற்கு பிறகு புகையிரத கட்டணத்தில் திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(Train fares hiked first time 10 years Transport ministry tamilnews)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மஸ்கெலியாவில் 80 பேர் வெளியேற்றம்; மரம் முறிந்து விழும் ஆபத்தில்
- வெள்ளநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் தோட்ட வீதி
- இரத்த தானம் வழங்கியவர்களுள் 30 பேருக்கு எயிட்ஸ்; அதிர்ச்சித் தகவல்
- மனைவியை முச்சக்கரவண்டியில் பலவந்தமாக கடத்திய கணவன்
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- போலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த நபர் கைது
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்