காட்டிகக்கொடுப்பு மற்றும் தமிழ் மக்களின் கொலைக்கு காரணமாக செயற்பட்டது என அனைத்து தவறுகளையும் தமிழீழ விடுதலை புலிகளே புரிந்தனர் என மாநகர சபை உறுப்பினர் வே தவராஜா தெரிவித்துள்ளார். Tamil people death reason ltte municipal council member announced
அண்மையில் இடம்பெற்ற மாநகர சபை அமர்வின் போது, மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துதல் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, அரசியல் நிலைப்பாட்டுக்கு அப்பால் அவர் தமிழுக்கு ஆற்றிய சேவைக்காக மாநகர சபையின் கலைக் குழு சார்பில் உறுப்பினர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்த வேண்டி அவசியம் பற்றி மாநகர சபை உறுப்பினர் வே. தவராஜா தெளிவுபடுத்தப்பட்டு அனைவரின் அனுமதியுடனும் சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் பின்னர் அஞ்சலி உரையும் நிகழ்த்தப்பட்டது. இதனை அன்னாரின் குடும்பத்தினருக்கு மாநகர சபை சார்பில் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டு சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதன் போது குறுக்கிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் றொனி, கருணாநிதி அவர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை அரசியல் ரீதியில் அவருக்கு அஞ்சலி செலுத்த முடியாது என்று தெரிவித்தார்.
இதற்கு உறுப்பினர் தவராஜா பதில் கூறுகையில், ஈழத் தமிழர்களின் நிலைமைக்கு கருணாநிதி மீது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் குறை கூறுவதற்கு முன்னர் அவர்கள் செய்தவற்றை சிந்திக்க வேண்டும்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தான் எமது மக்களின் கொலைக்குக் காரணமாக இருந்து காட்டிக் கொடுத்தவர்கள் என்பதை இச்சபையில் இருந்து உலகிற்கு தெரியப்படுத்திக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.
Tamil people death reason ltte municipal council member announced
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மஸ்கெலியாவில் 80 பேர் வெளியேற்றம்; மரம் முறிந்து விழும் ஆபத்தில்
- வெள்ளநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் தோட்ட வீதி
- இரத்த தானம் வழங்கியவர்களுள் 30 பேருக்கு எயிட்ஸ்; அதிர்ச்சித் தகவல்
- மனைவியை முச்சக்கரவண்டியில் பலவந்தமாக கடத்திய கணவன்
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- போலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த நபர் கைது
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com