ஈழத்தில் மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ய மனைவி துணைபோன சம்பவம்…. பதறும் பெற்றோர்….!

0
729
kilinochchi abuse school girls help protest wife arrest police remand

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் ஆசியரியர் ஒருவர் மாணவிகளை மனைவியின் துணையுடன் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளார்.. kilinochchi abuse school girls help protest wife arrest police remand

கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் குறித்த ஆசிரியர் தனியார் கல்வி நிறுனம் ஒன்றை இயக்கி வருகின்றார்.

இந்நிலையில் தனது மனைவியின் துணையுடன் கல்வி நிலையத்திற்கு கல்வி கற்க வருகின்ற மாணவிகள் சிலருக்கு பாலியல் தொந்தரவு மற்றும் பாலியல் துஷ்பிரயோக முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த கல்வி நிலையத்தை பொறுத்தவரை அங்கு 18 வயதிற்கும் குறைந்தவர்களே கல்வி கற்று வருகின்ற நிலையில், அங்கு கல்விகற்க வருகின்ற மாணவிகளுக்கு பாலியல் துஸ்பிரயோகம் ,பாலியல் தொந்தரவு பலமுறை இடம்பெற்று வந்துள்ளன.

இதற்கு நடவடிக்கை எடுக்க பலரும் முன்வராத நிலையில், கண்டாவளை பிரதேச செயலாளர் , உதவி பிரதேச செயலாளர் கண்டாவளை சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோரின் முயற்சியில் தர்மபுரம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதனை அடுத்து நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து தர்மபுரம் பொலிசாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதனை தொடர்ந்து குறித்த நிர்வாகி நேற்று (17) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.

குறித்த வழக்கை விசாரித்த பதில் நீதவான் சிவபாலன் எதிர்வரும் 30 திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
kilinochchi abuse school girls help protest wife arrest police remand

Tamil News Group websites