ரயில்வே தொழிற்சங்கங்களின் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (15) காலை நடைபெற்றுள்ளது. இதில், தமது பிரச்சினைக்கான தீர்வு குறித்து நீண்ட கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளனர். Railway Workers Association Ready Another Strike Tamil News
அதனையடுத்து இன்று (16) பிற்பகல் 2.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தமது சம்பள முரண்பாடு குறித்துக் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் தமது சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்துக்கு காலக்கெடு வழங்குவதாகவும், இதற்குள் தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின், எதிர்வரும் செவ்வாய் பின்னேரம் அல்லது புதன்கிழமை முதல் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அந்த சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதேவேளை, இன்னும் இரு மாதங்களின் பின்னரேயே ஆணைக்குழுவின் தீர்மானத்தின் படி ரயில்வே ஊழியர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சகோதரருக்கு இடையில் வாய்த்தர்க்கம்; பொல்லால் தாக்கி ஒருவர் பலி
- வடமாகாண அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்; ஆளுநர்
- ஓட்டுநர்களின் தொழில் அபாயத்தில்; பேரூந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்
- 108000 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- தாமரைத் தடாகத்தில் ஏழு வயது சிறுமி வீழ்ந்து பலி
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- மடுத் தேவலாயத்தில் பக்தர்களுக்கு திடீரென ஏற்பட்ட அச்சம்; இன்று ஆவணி உற்சவம்