வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா இன்று வியாழக்கிழமை முற்பகல் 10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. (nallur kandaswamy kovil festival today started)
இந்த ஆலயத்தில் தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ள மஹோற்சவத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 05 மணியளவில் திருமஞ்சத் திருவிழா இடம்பெறவுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 01 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 06 மணியளவில் அருணகிரிநாதர் உற்சவமும், 02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 06 மணியளவில் கார்த்திகை உற்சவமும் இடம்பெறவுள்ளது.
தொடர்ந்து 03 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 07 மணியளவில் சூர்யோற்சவமும், 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 07 மணியளவில் சந்தான கோபாலர் உற்சவமும், அன்றைய தினம் பிற்பகல் 05 மணியளவில் கைலாசவாகன உற்சவமும் இடம்பெறவுள்ளது.
05 ஆம் திகதி புதன்கிழமை காலை 07 மணியளவில் கஜவல்லி மஹாவல்லி உற்சவமும், அன்றைய தினம் பிற்பகல் 05 மணியளவில் வேல் விமான உற்சவமும், 06 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 07 மணியளவில் தண்டாயுதபாணி உற்சவமும் இடம்பெறவுள்ளது.
அன்றைய தினம் பிற்பகல் 05 மணியளவில் ஒருமுகத் திருவிழாவும், 07 ஆம் திகதி பிற்பகல் 05 மணியளவில் சப்பறத் திருவிழாவும், 08 ஆம் திகதி சனிக்கிழமை காலை 07 மணியளவில் தேர்த் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 07 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.
அன்றைய தினம் மாலை கொடியிறக்க வைபவம் இடம்பெறவுள்ளதுடன், வருடாந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
நல்லூர்க் கந்தன் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கான வசதிகளை வழமை போன்று யாழ். மாநகர சபை ஏற்பாடு செய்துள்ளதுடன், விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தலவாக்கலை – ஹட்டன் பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து பாதிப்பு
- மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த தந்தை
- 22 வயது பெண் நிர்வாணமாக குளிக்கும் காட்சிகளை முகப்புத்தகத்தில் பதிவேற்ற முயற்சித்த மூவர் கைது
- வட்டவளையில் மண்சரிவு; வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- மனைவி 20 பேருடன் கள்ளத் தொடர்பு; கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- மடுத் தேவலாயத்தில் பக்தர்களுக்கு திடீரென ஏற்பட்ட அச்சம்; இன்று ஆவணி உற்சவம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; nallur kandaswamy kovil festival today started