25 படகுகள் தீக்கிரை; 500 ஊழியர்கள் பாதிப்பு

0
481
25 boats fire 500 staff impact

பொலநறுவை மனப்பிட்டிய மஹாவெலி ஆற்றில் மணல் அகழ்வதற்காக பயன்படுத்தப்பட்டுவந்த 25 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. (25 boats fire 500 staff impact)

இனந்தெரியாத நபர்களினால் நேற்று இரவு இவ்வாறு படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீக்கிரையாக்கப்பட்ட படகுகளில் 19 படகுகள் தனியார் நிறுவனம் ஒன்றினதும், ஏனைய 6 படகுகளும் வேறு ஒரு நபருடையதும் என்றும் தெரியவந்துள்ளது.

இதனால் மணல் அகழ்வில் ஈடுபடும் சுமார் 500 ஊழியர்கள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலநறுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 25 boats fire 500 staff impact