45 நாட்கள் உணவின்றி தவித்த இலங்கை அகதி பெண்! (Video Exclusive)

0
462
sri lankan refugee woman stay without food 45 days

(sri lankan refugee woman stay without food 45 days)

45 நாட்கள் உணவின்றி தவித்த இலங்கை அகதி பெண்ணிடம் இராமநாதபுர மாவட்ட நீதிபதிகள் மண்டபம் அகதிகள் முகாமிற்க்குள் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உச்சகட்ட போரின் போது இலங்கை தமிழர்கள் தங்களது உயிர்களை காப்பற்றி கொள்ள தமிழகத்திற்க்கு அகதிகளாக சென்று பல்வேறு இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 1,500 க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரிசி உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்கள் இலவசமாக தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது.

மேலும் சிறப்பு முகாம்களில் பொலிஸ் பாதுகாப்பில் தங்கியுள்ள அகதிகளுக்கு உணவுப்படியாக தினமும் 100 இந்திய ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தநிலையில் இங்கு 24 வயதுடைய சோபணா என்ற இலங்கை அகதி மண்டபம் சிறப்பு முகாமில் பொலிஸ் பாதுகாப்பில் தங்கியுள்ளார்.

இவருக்கு கடந்த 45 நாட்களாக அகதிகள் மறுவாழ்வு துறையால் வழங்கப்படும் உணவுபடி வழங்கப்படாமல் இருந்துள்ளது. இந்தப் பிரச்னைக்கு ராமநாதபுரம் இலவச சட்ட உதவி மையம் மூலம் தீர்வு கிடைக்குமா என வாட்ஸ் அப் மூலம் புகார் அளித்துள்ளார்.

இதனடிப்படையில் இலவச சட்ட உதவி மைய தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான கயல்விழி, செயலாளரும் இராமநாதபுரம் சார்பு நீதிபதியுமான ராமலிங்கம் ஆகியோர் மண்டபம் அகதிகள் முகாம் சென்று இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.

விசாரணையில் 45 நாட்கள் வழங்கப்படாத உணவுப் படியை அரசு விதிகளுக்குட்பட்டு நேற்று முதல் வழங்கப்பட்டு வருவதாக நீதிபதிகளிடம் அகதி மறுவாழ்வு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்த நீதிபதி கயல்விழி கூறுகையில், அகதிகள் பிரச்சினை மட்டுமின்றி இலவச சட்ட உதவி மையத்திற்கு வரும் புகார்கள் மீது உரிய விசாரணை செய்து சட்ட உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

 

(sri lankan refugee woman stay without food 45 days)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites